Header Ads

Header ADS

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா காத்தான்குடி கிளையின் *இளைஞர் விவகார பிரிவினால் தொடராக நடைபெற்று வரும் இளைஞர்களுக்கான தலைமைத்துவ *ஒரு மாத கால சான்றிதழ் பயிற்சி நெறியின்* முதற்கட்ட அறிமுக நிகழ்வு 29.01.2025 புதன்கிழமை காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா மண்டபத்தில் இடம்பெற்றது.


 அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா காத்தான்குடி கிளையின் *இளைஞர் விவகார பிரிவினால் தொடராக நடைபெற்று வரும் இளைஞர்களுக்கான தலைமைத்துவ *ஒரு மாத கால சான்றிதழ் பயிற்சி நெறியின்* முதற்கட்ட அறிமுக நிகழ்வு 29.01.2025 புதன்கிழமை காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வை அஷ் ஷெய்க் *MSM. முபாறக் (றியாழி) MA* அவர்கள் நெறியாள்கை செய்ததுடன் தலைமை உரையை ஜம்இய்யாவின் கௌரவ தலைவர் *அஷ்ஷெய்க் MI. அப்துல் கபூர் (மதனி) BA* அவர்களும், வரவேற்பு உரையை கௌரவ செயலாளர் *அஷ்ஷெய்க் MIM. ஜவாஹிர் (பலாஹி) BA* அவர்களும் மற்றும் இக்கற்கை நெறி சம்பந்தமான அறிமுக கருத்தரங்கு நிகழ்வை இளைஞர் விவகாரப் பிரிவின் உறுப்பினர் *அஷ்ஷெய்க் இஹ்ஸான் ஏ றஹீம் (அல் ஹாஷிமி) BSc.in.psy* அவர்களும் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இளைஞர் விவகாரப் பிரிவின் கௌரவ செயலாளர் *அஷ்ஷெய்க் பாயிஸ் (ஹுமைதி)* அவர்களின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிகமான இளைஞர்கள் கலந்து கொண்டதுடன் தொடர்ந்தும் இளைஞர்கள் இவ் ஒரு மாத தலைமைத்துவ பயிற்சி நெறிக்கு உள்வாங்கப்படவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா,
காத்தான்குடி கிளை

No comments

Powered by Blogger.